ஆசியுரை

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி,
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை.

எமது நாட்டுக்கல்வி வரலாற்றில் ஒரு உன்னத நிலையில் அன்றும் இன்றும் விளங்கி வரும் கல்வி நிறுவனம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி ஆகும்.

மக்களின் அபிமானத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக இக்கல்லூரி திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. "மன்னனில் கற்றோன் சிறப்புடையோன் " என்ற வாக்குக்கு ஏற் புடைத்தாக மக்களை உயர்த்தி வைப்பது கல்வியாகும்.

எமது நாட்டின் பெருமை கல்வி வரலாற்றோடு இணைந்தது.

கல்வி என்பது ஒருவனுக்கு வாழ வழிசெய்து கொடுப்பதும் எப்படி வாழவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதும் ஆகும்.

இந்தவகையில் எமது வாழ்க்கைக்கு அத்திபாரமாக அமைவது கல்விச் சாலைகளே ஆகும்.

இத்தகைய பெருமைகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்வது சுழிபுரம் விக்ரோறி யாக் கல்லூரி ஆகும்.

வைத்திய மேதைகள், கணித மேதைகள், ஆசிரியப் பெருந்தகைகள், புலவர்கள். அறிஞர்கள் போன்றோரை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.

வலி மேற்கில் கல்விக்குரிய சிறப்பான இடமாக இக்கல்லூரி விளங்குவதை அனைத் துக் கல்விமான்களும் ஆமோதிப்பர்.

இத்தகைய கல்லூரி தனது நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாட இருப்பது பெருமைக்குரிய நிகழ்வாகும்.

இத்தகைய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலைச் சமூகத்தவர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே. இக்கல்லூரி மேலும் மேலும் உயர்வடைந்து மேன்மை அடையவேண்டும் என்று திருவருளைப் பிரார்த்திக்கின்றேன்.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.